காங்கிரஸ் உட்கட்சி பூசல்களால் பிளவுபட்டுள்ளது, நாங்கள்தான் உண்மையான காங்கிரஸ்: திரிணாமூல்

காங்கிரஸ் உட்கட்சி பூசல்களால் பிளவுபட்டுள்ளது, நாங்கள்தான் உண்மையான காங்கிரஸ்: திரிணாமூல்
காங்கிரஸ் உட்கட்சி பூசல்களால் பிளவுபட்டுள்ளது, நாங்கள்தான் உண்மையான காங்கிரஸ்: திரிணாமூல்

தாங்கள்தான் உண்மையான காங்கிரஸ் என்றும், காங்கிரஸ் கட்சி கோஷ்டிவாதத்தால் பாதிக்கப்பட்ட கட்சி என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதன் கட்சி பத்திரிகையான 'ஜாகோ பங்களா' தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ஜாகோ பங்களாவின் தலையங்கத்தில், முக்கிய எதிர்க்கட்சி பணியை முன்னெடுத்துச் செல்ல காங்கிரஸால் இயலாது. திரிணாமூல் காங்கிரஸின் தேசிய செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்ற மாநிலங்களில் விரிவுபடுத்த பல திட்டங்களை வைத்திருக்கிறார், ஆனால் காங்கிரஸ் பாஜகவுக்கு எதிராக நிற்கத் தவறி வருகிறது.

மத்தியில் பாஜகவுக்கு முக்கிய எதிர்க்கட்சியாக இருப்பதால் காங்கிரஸ் அதற்கு எதிராக போராட வேண்டும். இருப்பினும், காங்கிரஸ் தங்களுக்குள்ளான போரினால் சோர்வடைந்துள்ளது. உட்கட்சி பூசல் மற்றும் பிரிவுவாதத்தால் பிளவுபட்டுள்ளது. ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, யாரோ ஒருவர் முன்வர வேண்டும். அந்த பொறுப்பை திரிணாமூல் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும், அதுதான் உண்மையான காங்கிரஸ்என தெரிவித்துள்ளது

பாஜகவுக்கு எதிராக நிற்கத் தவறியதாகக் கூறி தேசிய காங்கிரஸுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாக குரல் கொடுத்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற ஒன்று இல்லை என்று சில நாட்களுக்கு முன்னர் கூறிய மம்தா பானர்ஜி, கோவா, திரிபுரா, மேகாலயா, உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட தீவிரமான பணிகளை முன்னெடுத்து வருகிறார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com