முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை நீர் செல்லும் வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புதரை உள்ளிட்ட அணை நீர் செல்லும் இடுக்கி அணை வரையிலான நீரோட்ட பாதைகளுக்கு, இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்த பின்பு மூன்றாம் கட்ட இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையிலிருந்து 13 மதகுகள் வழியாக கேரளாவிற்கு உபரிநீர் திறந்து விடப்படும்.