டெல்லியில் உள்ள தமிழகத்தினருக்கு வசதிகளை செய்து கொடுங்கள் : கெஜ்ரிவாலுக்கு இபிஎஸ் கடிதம்

டெல்லியில் உள்ள தமிழகத்தினருக்கு வசதிகளை செய்து கொடுங்கள் : கெஜ்ரிவாலுக்கு இபிஎஸ் கடிதம்
டெல்லியில் உள்ள தமிழகத்தினருக்கு வசதிகளை செய்து கொடுங்கள் : கெஜ்ரிவாலுக்கு இபிஎஸ் கடிதம்

டெல்லியில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 559 பேருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 559 பேர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளை உரிய வகையில் செய்து கொடுக்கும் படி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அத்துடன் நீரழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ரமலான் நோன்பு தொடங்கவுள்ளதால் அதற்கான உணவு வசதிகளையும் செய்துகொடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com