\
குடியுரிமை மசோதாவின் அம்சங்களும்... எதிர்ப்பு நிலவுவதற்கான காரணங்களும்..!

குடியுரிமை மசோதாவின் அம்சங்களும்... எதிர்ப்பு நிலவுவதற்கான காரணங்களும்..!

குடியுரிமை மசோதாவின் அம்சங்களும்... எதிர்ப்பு நிலவுவதற்கான காரணங்களும்..!
Published on

குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், அதன் முக்கிய அம்சங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடிமகன் உரிமை தருவதே குடியுரிமை மசோதா ஆகும். மேற்கண்ட 3 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக குடிபெயர்ந்த 6 மதத்தவருக்கு குடியரிமை அளிக்க மசோதா வழி செய்கிறது. 

இம்மசோதாப்படி இந்துக்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்ஸிக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தவர்கள் இந்திய குடியுரிமை பெற முடியும். தற்போது இம்மூன்று நாடுகளில் இருந்து வந்த அகதிகள் இந்திய குடியுரிமை பெற குறைந்த பட்சம் 11 ஆண்டுகள் இங்கு வசித்திருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. 

ஆனால் இந்த விதி குறிப்பிட்ட 6 மதத்தவருக்கும் 5 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. இது தவிர குடியுரிமை பெற விரும்புபவர்கள் அதற்கான சட்ட உதவிகளையும் பெற மசோதா வழிவகுக்கிறது. எனினும் இம்மசோதாவின்படி 3 நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமிய அகதிகள் குடியுரிமை பெற வழியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. அனைவரையும் சமமாக கருதும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் 14ஆவது பிரிவுக்கு இம்மசோதா எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com