‘200 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது’ ரிசர்வ் வங்கி 

‘200 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது’ ரிசர்வ் வங்கி 
‘200 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது’ ரிசர்வ் வங்கி 

2019-20 ஆம் நிதியாண்டில் மட்டும் 200 ரூபாய் கரன்சியில் கள்ள நோட்டுகளின் புழக்கம் கடந்த நிதி  ஆண்டை  விட 151 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

கடந்த 2016 நவம்பரில் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் பண புழக்கத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டன. 

அதோடு புதிதாக 200 ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்திருந்தது. கள்ள நோட்டு பிரச்சனையில் தீர்வு காண்பதற்காக இந்த கரன்சிகளை அறிமுகம் செய்துள்ளோம் எனவும் அரசு விளக்கம் கொடுத்திருந்தது. 

இருப்பினும் புதிய கரன்சியிலும் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2019-20 ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் கரன்சியில் சுமார் 30054 கள்ள நோட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த (2018-19) ஆண்டை விட சுமார் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல 200 ரூபாய் கரன்சியில் மொத்தமாக 31969 கள்ள நோட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட சுமார் 151 சதவிகிதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கிகள் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையிலேயே ரிசர்வ் வங்கி கள்ள நோட்டு தொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் போலீஸ் மற்றும் அமலாக்க துறை கைப்பற்றிய கள்ள நோட்டுகளின் தகவல்கள் சேர்க்கப்படவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com