பட்டப்பகலில் இளைஞர் கொலை : அசாமில் 5 பேர் கைது..!

பட்டப்பகலில் இளைஞர் கொலை : அசாமில் 5 பேர் கைது..!
பட்டப்பகலில் இளைஞர் கொலை :  அசாமில் 5 பேர் கைது..!

அசாமில் இளைஞரைப் பட்டப்பகலில் கொலை செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் 26 வயது இளைஞர், 5 பேர் கொண்ட கும்பலால் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவுகாத்தியில் போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் சிலாபதார் பகுதியைச் சேர்ந்த ரிதுபர்னா பெகு என்பது தெரியவந்தது. அவர் ஊபர் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்ததும், தற்போது பொது முடக்கத்தால் வேலையிழந்து ஒரு கடையில் பணியாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவரை நூன்மதி பகுதியில் வைத்து 5 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்தக் கொலையைச் செய்ததாக இப்ராஹிம் அலி, துலால் அலி, அர்மன் அலி, ஹுசைன் அலி மற்றும் மனுவாரா கதுன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் போலீஸார் கொலை குறித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com