பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பதவிக்காலம் நீட்டிப்பு

பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பதவிக்காலம் நீட்டிப்பு
பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பதவிக்காலம் நீட்டிப்பு

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அரவிந்த் சுப்ரமணியன் பதவிக்காலம் அடுத்த மாதம் 16-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சகம் இந்த பதவி நீட்டிப்பை செய்துள்ளது. தலைமை பொருளாதார ஆலோசகராக கடந்த 2014-ம் ஆண்டு அரவிந்த் சுப்ரமணியன் பொறுப்பேற்றார். இது தொடர்பாக நிதி அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில், "அக்டோபர் 16-ம் தேதியுடன் தனது 3 ஆண்டு பதவிக்காலத்தை முடிக்கும் அரவிந்த் சுப்ரமணியனுக்கு மேலும் ஒரு ஆண்டிற்கு பதவி நீட்டிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளது.

முன்னதாக, தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்பிரமணியனை நீக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த ஆண்டு வலியுறுத்தி இருந்தார். பல்வேறு விமர்சனங்களையும் முன் வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com