ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணை
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஏற்கனவே ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். விசாரணைக் காவலுக்குப் பிறகு,15 நாட்கள் நீதிமன்றக் காவலில் ப.சிதம்பரத்தை வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கடந்த 5 ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ‌ 

இந்நிலையில், ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத்தாக்கல் செய்துள்ளார். சனி, ஞாயிறு மற்றும் மொஹரம் விடுமுறையை ஒட்டி கடந்த 3 நாட்களாக ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியாமல் இருந்தது. விடுமுறைக்கு பின் மீண்டும் நீதிமன்றம் திறக்கப்பட்டதால் ப.சிதம்பரம் சார்பில் ஜாமீன் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவில், சம்மன் அனுப்பியபோது முறையாக ஆஜர் ஆனதுடன், ‌15 நாட்கள் விசாரணையின்போதும் முழு ஒத்துழைப்பு வழங்கினேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னிடம் முழு விசாரணை நடத்தி விட்டதாக சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கூறியுள்ளதால், இனியும் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார். எனவே தன்னை ஜாமீனில் விடுக்கக்கோரி மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளிலிருந்து ஜாமீன் வழங்கக் கோரி தனித்தனியே ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com