சத்தீஷ்கர்: மருந்து வாங்க சென்ற இளைஞரை தாக்கிய ஆட்சியர்

சத்தீஷ்கர்: மருந்து வாங்க சென்ற இளைஞரை தாக்கிய ஆட்சியர்
சத்தீஷ்கர்: மருந்து வாங்க சென்ற இளைஞரை தாக்கிய ஆட்சியர்

சத்தீஷ்கரில் மருந்து வாங்கச் சென்ற இளைஞர் இருசக்கர வாகனத்தை நிறுத்தவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியரும் காவலர்களும் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

சுராஜ்பூரில் அந்த இளைஞர் செல்போனில் படம் பிடித்ததாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா, இளைஞரின் செல்போனைக் கேட்கிறார். செல்போனை இளைஞர் கொடுத்ததும் எதிர்பாராத விதமாக ஆவேசமாக தரையில் எறிந்து சேதப்படுத்துகிறார் ஆட்சியர். மருந்து சீட்டை இளைஞர் காண்பித்தும் ஆட்சியர் ஏற்காமல் காவலர்களை அழைத்து இளைஞரை கவனிக்கச் சொன்னதும், லத்தியால் இளைஞரை காவலர்கள் தாக்குகின்றனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள காவல்துறையினர், சாலை விதிமீறி வாகனத்தில் அதிவேகமாக சென்றதாகக் கூறி இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com