பாரதிய ஜனதா ஆட்சியில் மொபைல் போன் சேவை கட்டணம் குறைவாக இருப்பதாக மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் ஒரு ஜிபி இணை சேவை பெற 269 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் செலவிட நேர்ந்ததாகவும், தற்போதைய ஆட்சியில், ஒரு ஜிபி 11 ரூபாய் 78 காசுகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
முன்னணி செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் சேவைக் கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில் அமைச்சரின் விளக்கம் வெளியாகியுள்ளது.