’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு

’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு
’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு

யானை தந்தங்கள் வைத்திருந்த வழக்கில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் மோகன்லால் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் 2012 ஆம் நடத்திய சோதனையில், 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக கோடநாடு வனத்துறையினர் மோகன்லாலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே தந்தங்களைத் திருப்பிக் கேட்டு, அப்போதைய வனத்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை விடுத்தார். வனத்துறை சட்டப்படி யானை தந்தங்களை வீடுகளில் வைத்திருக்கக்கூடாது. ஆனால் சட்டத்தில் திருத்தம் செய்து அன்றைய கேரள அரசு தந்தங்களை, லாலிடம் திருப்பி கொடுத்ததாகக் கூறப்பட்டது.  இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் 7 வருடத்துக்கு பிறகு கோடநாடு வனத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வன அதிகாரியான ஜி.தனிக் லால், பெரும்பாவூர் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.  இந்நிலையில் இந்தக் குற்றப்பத்திரிகை யை ரத்து செய்யக் கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் மோகன்லால் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தந்தங்கள் வைத்திருக்க என்னிடம் லைசென்ஸ் இருக்கிறது. இருந்தும் என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதில் சதி இருக்கிறது. எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த புகாரை எழுப்பியுள்ளனர்’ என்று அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com