எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன், சரண்ஜித் சிங், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதைத் தொடர்ந்து, இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சரண்ஜித் சிங்குக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் அம்மாநிலத்தின் முதல் பட்டியலினத்தை சேர்ந்த முதலமைச்சர் என்ற பெருமையை சரண்ஜித் சிங் பெற்றுள்ளார்.