Tirupati | திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
tirupatiFB

திருப்பதி | நன்கொடையாளர்கள் ஒரே நாளில் ஏழுமலையானை தரிசிக்கலாம்.. தரிசன முறையில் மாற்றம்!

நன்கொடையாளர்கள் இனி ஒரே நாளில் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் தரிசனமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக டிக்கெட் வாங்கினால் 2 நாட்களுக்கு பிறகு தான் தரிசனம் செய்யமுடியும் என்ற முறை மாற்றப்பட்டுள்ளது.
Published on

திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10ஆயிரம் ரூபாய் நன்கொடையாக கொடுக்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசன டிக்கெட் மூலம் அன்று மாலையே தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனி தங்கவேண்டிய அவசியமில்லை..

மாற்றப்பட்ட நடைமுறைக்கு முன், ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு 10ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு, 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படும். அதனை பயன்படுத்தி, டிக்கெட் வாங்கியதற்கு அடுத்த நாள் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம்.

திருப்பதி
திருப்பதிமுகநூல்

இந்த பழைய முறையால், பக்தர்கள் 2, 3 நாட்கள் திருமலையில் தங்கியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதனை தடுக்கும் வகையில், நன்கொடையாளர்கள் டிக்கெட் வாங்கிய அதே தினம் மாலையிலேயே ஏழுமலையான தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com