இந்தியா
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சதவீதம் அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சதவீதம் அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஒரு சதவீதம் கூடுதலாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ஊழியர்களின் அடிப்படை ஊதியத்திலிருந்து ஏற்கெனவே வழங்கப்படும் 4 சதவிகித அகவிலைப்படியுடன் ஒரு சதவிகிதம் கூடுதலாக வழங்கப்படும். 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இது வழங்கப்படுவதாகவும் அரசு கூறியுள்ளது.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.