"அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கம்தான்" - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

“அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கம்தான்” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெய்சங்கர்
அமைச்சர் ஜெய்சங்கர்முகநூல்

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஊர்கள், மலைகளுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது. இதுதொடர்பான 4 ஆவது பட்டியலை சீனா வெளியிட்டதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில் “அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கம்தான்” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனா
அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனாpt web

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “உங்கள் வீட்டிற்கு நான் பெயர் சூட்டினால், அது என்னுடையதாகிவிடுமா? பெயரை மாற்றுவதால் எந்த மாற்றமும் நிகழாது. எல்லை கட்டுப்பாடு கோடு அருகே ராணுவம் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளது” என்றுள்ளார்.

இதற்கிடையே, சீனாவுக்கு தக்க பதிலடி கொடுப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மேலும், இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்கும் சீனாவின் செயலுக்கு, மோடி அரசின் பேச்சுவார்த்தையால் தீர்வு காண முடியவில்லை என்றும் கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர் ஜெய்சங்கர்
30 இடங்களுக்கு சீன மொழிப் பெயர்கள்.. அருணாச்சல பிரதேசத்தில் சீனா அட்டகாசம்.. பின்னணி என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com