இலங்கை கடற்படை கைதுசெய்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – கனிமொழி கோரிக்கை

இலங்கை கடற்படை கைதுசெய்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – கனிமொழி கோரிக்கை
இலங்கை கடற்படை கைதுசெய்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – கனிமொழி கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கனிமொழி எம்.பி கோரிக்கை வைத்திருக்கிறார்

இது தொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன். ஒன்றிய அரசு உடனடியாக இலங்கை அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு அவர்களின் செயலைக் கண்டித்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com