சிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு

சிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு
சிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனா அபாயத்தை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டிற்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

‌‌‌‌நடப்பாண்டிற்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரும் கல்வித்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதில் தேர்வுகளை தற்போதைய கொரோனா சூழலில் நடத்துவதன் நன்மை, தீமைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் பின் பிரதமர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்றும் இதில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

எனவே இந்தாண்டுக்கான ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் கைவிடப்படுவதாகவும் மோடி தெரிவித்துள்ளார். தேர்வு குறித்த மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடி மிகுந்த இந்த தருணத்தில் தேர்வெழுத மாணவர்களை நிர்பந்திப்பது சரியாக இருக்காதும் என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார். இந்த சூழலில்தான் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்து அதன் அடிப்படையில் தேர்வை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதும் தேர்வுகள் நடத்த ஏற்ற சூழல் இல்லாததால் அவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனினும், பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சியை குறித்த காலத்திற்குள் சிபிஎஸ்இ முடிவு செய்யும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து புதன்கிழமை ஆலோசிக்கப்பட உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்புக்கு பிறகே, தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் பொய்யாமொழியிடம் புதிய தலைமுறை சார்பில் கேட்கப்பட்டபோது ப்ளஸ் தேர்வு குறித்து புதன்கிழமை ஆலோசிக்கப்படும் என்று பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com