அரிசிக்கு தவிக்கும் நாடுகள்.. இந்தியாவின் பங்களிப்பு என்ன?

புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா 20 சதவிகிதம் வரி விதித்திருக்கும் நடவடிக்கையால் சர்வதேச அளவில் அரிசிக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா 20 சதவிகிதம் வரி விதித்துள்ளதோடு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நொய் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் பாஸ்மதி அல்லாத பச்சரிசி ஏற்றுமதிக்கு 40 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது. உள்நாட்டில் தேவையை பூர்த்தி செய்வதோடு, அரிசி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனால், சர்வதேச அளவில் அரிசிக்கு பாதிப்புகள் ஏற்படுமா? உலகளவில் அரிசி தேவையில் இந்தியாவின் பங்களிப்பு என்ன? விரிவான விவரங்களை வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com