முக்கிய நபர்களின் செல்போன்கள் வேவு பார்ப்பா?-குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

முக்கிய நபர்களின் செல்போன்கள் வேவு பார்ப்பா?-குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

முக்கிய நபர்களின் செல்போன்கள் வேவு பார்ப்பா?-குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு
Published on

இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரது செல்போன் உரையாடல்கள் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

THE WIRE உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் ஆய்வில், இந்தியாவைச் சேர்ந்த பலரது செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கக்கூடும் எனத் தகவல் வெளியானது. குறிப்பாக the wire, தி ஹிந்து, இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களின் பத்திரிகையாளர்களது செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டிருக்கலாம் என புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய அரசு, கடந்த காலங்களிலும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்பதால் அது காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

அதேநேரத்தில் பயங்கரவாதம், சட்டவிரோத செயல் தடுப்புக்காக நாட்டின் நலன் கருதி சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்படுவதாகவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய அரசு இவ்வாறு விளக்கமளித்துள்ளபோதிலும் நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com