இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல் ஃபோன்களின் எண்ணிக்கை நடப்பு நிதியாண்டில் 29 கோடியை தொடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய செல்ஃபோன் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம், செல்போன் தயாரிப்பு தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த நிதியாண்டில் மட்டும் உள்நாட்டில் 22 கோடியே 50 லட்சம் செல்ஃபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், இது நாட்டின் ஒட்டுமொத்த மொபைல் ஃபோன் தேவையில் 80% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் மொபைல் ஃபோன் உற்பத்தி அதிகரிப்பால் கடந்த சில ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அன்னியச் செலாவணியை இந்தியா சேமித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், மொபைல் ஃபோன் உற்பத்தியில் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ள சீனாவுக்கு அடுத்த இடத்திற்கு இந்தியா தற்போது முன்னேறியுள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.
Read Also -> விஷாலின் ’அயோக்யா’வுக்கு பிரமாண்ட செட்