துணிக்கடையில் நூதன முறையில் திருடும் பெண்கள் - சிசிடிவி அம்பலம்

துணிக்கடையில் நூதன முறையில் திருடும் பெண்கள் - சிசிடிவி அம்பலம்
துணிக்கடையில் நூதன முறையில் திருடும் பெண்கள் - சிசிடிவி அம்பலம்

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில், துணிக் கடையில் இரண்டு பெண்கள் நூதனமாக ஆடைகளைத் திருடும் காட்சி அக்கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

புனேவில் உள்ள துணிக்கடை ஒன்றில் கையில் குழந்தையுடன் இரண்டு பெண்கள் சென்றுள்ளனர். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை தோளில் வைத்தபடி, ஒரு பெண் துணிகளை தேர்வு செய்வதுபோல் நடந்து கொண்டிருந்தார். 

மற்றொரு பெண் துணிகளை அங்கிருக்கும் மேசை மேல் எடுத்து வைத்து, ஆடையை தேர்வு செய்வதுபோல் பணிப்பெண்ணை திசை திருப்பும் நேரத்தில், குழந்தையுடன் இருந்த பெண் துணிகளை லாவகமாக திருடி குழந்தைக்கு அடியில் மறைத்து வைத்து கொள்கிறார். பின்னர் எதுவும் தெரியாததுபோல அங்கிருந்து வெளியேறினார். இந்தக் காட்சிகள் கடையில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com