நெல்லை முன்னாள் மேயர் கொலை - சிபிசிஐடி ஐஜி ஆய்வு 

நெல்லை முன்னாள் மேயர் கொலை - சிபிசிஐடி ஐஜி ஆய்வு 
நெல்லை முன்னாள் மேயர் கொலை - சிபிசிஐடி ஐஜி ஆய்வு 

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை குறித்து சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

கடந்த ஜுலை 23-ம் தேதி முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் 29-ம் தேதி இரவு கார்த்திக்ராஜை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். அடுத்த நாள் இரவில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நிஷாந்தினி முன்பு கார்த்திக்ராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 14 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

இதைத்தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் கடந்த ஜுலை மாதம் 29-ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. மூவர்  கொலைவழக்கில் கைதான கார்த்திக்ராஜை ஏழு நாளில் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார், நெல்லை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்த நிலையில் வரும் வரும் 12-ஆம் தேதி வரை சிபிசிஐடி விசாரணைக்கு எடுக்க  நீதிபதி  உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், 3 பேர் கொலை குறித்து சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com