காவிரியில் தண்ணீர் திறக்க முடியுமா? முடியாதா?: எச்சரித்த நீதிமன்றம்

காவிரியில் தண்ணீர் திறக்க முடியுமா? முடியாதா?: எச்சரித்த நீதிமன்றம்

காவிரியில் தண்ணீர் திறக்க முடியுமா? முடியாதா?: எச்சரித்த நீதிமன்றம்
Published on

தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி நீர் திறக்க, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த 6 வாரங்களுக்குள் புதிய திட்டத்தை வகுக்கும்படி கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவிட்டது. அதற்கான கெடு முடிந்தும் மத்திய அரசு வாரியத்தை அமைக்கவில்லை. இந்த வழக்கில் இதற்கு முன் நடந்த விசாரணையின்போது, 2 வார‌ங்களுக்கு நதிநீர் பங்கீடு குறித்த வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. 

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு
 வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடையும் நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு
 வந்தது. 

காவிரி வழக்கில் வரைவுத்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டது. தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி நீர் திறந்து விட நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது 4டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்தால் நீர் தர முடியுமா? முடியாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதிமன்ற உத்தரவை மீறினால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்து வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com