காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது

காவிரி நதிநீர்‌ மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறயுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசால் அமைக்கப்பட்ட காவிரி நதிநீர்‌ மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஆணையத்தின் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் 28 ஆம் தேதி காவிரி நதிநீர்‌ மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே நாளை டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது. அதில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின்  நிலைபாட்டிற்கு தமிழகம் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் எனத் தெரிகிறது. அதேநேரத்தில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மந்திய நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தாண்டு பருவமழை இல்லாததால் காவிரி படுகை பகுதிகள் குறித்து ஆய்வறிக்கை கொடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

மேகதாது அணை விவகாரத்தில் மேலாண்மை ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்க முடியும் என்பதால், அது குறித்து இந்தக் கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் இந்தக் கூட்டம் ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெறும் என்றும் அதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com