காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் இன்று நடக்கிறது

காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் இன்று நடக்கிறது
காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் இன்று நடக்கிறது

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் ஒழுங்காற்றுக்குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் மதியம் 3 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். 

கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டங்கள் அனைத்தும் பெங்களூருவில் நடைபெற வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. ஒழுங்காற்றுக்குழு கூட்டம் பெங்களூரில் நடைபெற்றால் தான் அணையின் நீர் இருப்பு, பராமரிப்பு உள்ளிட்டவை முழுமையாக தெரிய வரும் என வலியுறுத்தியது. ஆனால் தமிழகத்தில் கோரிக்கை இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com