மத்திய அரசிதழில் வெளியானது காவிரி ஆணையம்

மத்திய அரசிதழில் வெளியானது காவிரி ஆணையம்
மத்திய அரசிதழில் வெளியானது காவிரி ஆணையம்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குவது வழக்கம். எனவே பருவமழை காலத்துக்கு முன்பாக காவிரி ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதனை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. எனவே மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஆயத்தமானது. இதுதொடர்பாக தமிழக வழக்கறிஞர்கள் குழுவுடன் தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு
முன்னர் காவிரி ஆணையம் அமைப்பதற்கான உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கையெழுத்திட்டார். இந்நிலையில் தான் அரசிதழில் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com