பண்டோராஸ் பேப்பர்ஸ்: பலதுறை குழு விசாரிக்கும் என அறிவிப்பு

பண்டோராஸ் பேப்பர்ஸ்: பலதுறை குழு விசாரிக்கும் என அறிவிப்பு

பண்டோராஸ் பேப்பர்ஸ்: பலதுறை குழு விசாரிக்கும் என அறிவிப்பு

பண்டோராஸ் பேப்பர்ஸ் மூலம் கசிந்துள்ள ஒவ்வொரு இந்தியரின் பெயரும் விசாரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

வரித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி, நிதிசார் உளவுத்துறை என பலதுறையினரும் இணைந்த குழுவினர் விசாரணையை மேற்கொள்வார்கள் என்றும், பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் தொடர்பான விவரங்கள் வெளிநாடுகளிலிருந்து கோரி பெறப்படும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

14 சட்ட ஆலோசனை மற்றும் நிதி சேவை நிறுவனங்களின் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கசிந்து பல பிரபலங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அரசு அனைத்து தகவல்களையும் கவனத்தில் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்டப்படியான நடவடிகை எடுக்கப்படும் எனவும் தெர்விக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com