மாமியாரை தாக்கியதாக, சபரிமலை சென்றுவந்த கனகதுர்கா மீது வழக்கு

மாமியாரை தாக்கியதாக, சபரிமலை சென்றுவந்த கனகதுர்கா மீது வழக்கு
மாமியாரை தாக்கியதாக, சபரிமலை சென்றுவந்த கனகதுர்கா மீது வழக்கு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்ட வந்த கனகதுர்கா மீது, மாமியாரை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிராக கேர ளாவில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த கனகதுர்கா (44), பிந்து (42) ஆகிய பெண்கள் பலத்த பாது காப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு கருதி போலீசார் இருவரையும் வீட்டுக்கு அனுப் பாமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 


இந் நிலையில் கனகதுர்கா மலப்புரம், பெரிந்தலமன்னாவில் உள்ள தனது கணவரின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்றார். அப்போது சபரிமலை சென்றது தொடர்பாக கனகதுர்காவுக்கும், அவர் மாமியாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கனகதுர்காவை அவரது மாமியார் சுமதியம்மா மரக்கட்டையால் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக மருத்துவமனையில்  அனுமதிக்கப் பட்ட அவர்  சுமதியம்மா மீது பெரிந்தல்மன்னா போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக் குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் தன்னை கனகதுர்கா கடுமையாகத் தாக்கினார் என்று மருத்துவமனையில் சுமதியம்மாவும் அனுமதிக்கப்பட்டார். கனகதுர்கா மீது அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com