தாம்பத்யத்துக்கு மறுப்பு: மனைவியை கொன்ற கேன்சர் நோயாளி!

தாம்பத்யத்துக்கு மறுப்பு: மனைவியை கொன்ற கேன்சர் நோயாளி!
தாம்பத்யத்துக்கு மறுப்பு: மனைவியை கொன்ற கேன்சர் நோயாளி!

தாம்பத்ய உறவுக்கு மறுத்த மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

நொய்டாவில் அருகில் உள்ள சிஜார்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் மனைவி மம்தா தேவி (36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மகேஷுக்கு கேன்சர் நோய் இருப்பது தெரியவந்தது. அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் நோய் முற்றியது. வேலைக்குச் செல்ல முடியவில்லை மகேஷால். குழந்தைகளை காப்பாற்ற நொய்டாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் தையல் வேலையில் சேர்ந்தார் மம்தா. கடந்த ஒரு வாரத்துக்கு முன் தனது சகோதரன் ராகுல் வீட்டில் இருந்தார் மம்தா. அப்போது தகவல் ஏதும் சொல்லாமல் அங்கு வந்தார் மகேஷ். பேசிக்கொண்டிருந்த மகேஷிடம், ‘நாளை எய்ம்ஸ் மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் ராகுல்.

இந்நிலையில் மனைவியை தாம்பத்திய உறவுக்கு அழைத்தாராம் மகேஷ். அவர் கேன்சர் நோயாளி என்பதால் கடந்த சில மாதங்களாகவே அதை மறுத்து வந்தாராம் மம்தா. இப்போதும் இப்படி மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அத்திரமடைந்த, மகேஷ் அங்கிருந்த கத்தியால் மம்தாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார். 

இதுபற்றி ராகுல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மகேஷை தேடி வந்தனர். நேற்று கைது செய்தனர். அப்போது, ஏன் கொன்றேன் என்பதை அவர் இப்படித் தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com