ஜன்னல் வழியாக வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்: பண மழையில் நனைந்த பாதசாரிகள்!

ஜன்னல் வழியாக வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்: பண மழையில் நனைந்த பாதசாரிகள்!
ஜன்னல் வழியாக வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்: பண மழையில் நனைந்த பாதசாரிகள்!

கொல்கத்தாவில் வருவாய் புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்திய நிறுவனத்தின் கட்டடத்திலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வீசியெறிந்தனர். 

நேற்று மாலை கொல்கத்தாவின் வணிக நிறுவனத்தின் கட்டடத்தில் இருந்து பண மழை பெய்தது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஹோக் என்ற வணிக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது அலுவலக கட்டடத்தின் பல்வேறு தளங்களிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வீசினர். சில கட்டுகள் அந்தரத்தில் பிரிந்து ரூ.100, 500, 2000 நோட்டுகள் காற்றில் பறந்து தரையில் விழுந்தன. கீழே இருந்த பலரும் ரூபாய் நோட்டுகளை அவசரம் அவசமாக எடுத்துச் சென்றனர்.

திடீர் பணமழையை ஆச்சரியமாக கண்ட சிலர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். கொல்கத்தாவின் பணமழை வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜன்னல் வழியாக கட்டுக்கட்டாக பணத்தை ஊழியர் ஒருவர் வீசுகிறார்.

காற்றின் வேகத்தில் சில கட்டுகள் பிரிந்து பணம் பறக்கிறது. வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து பணத்தை ஊழியர்கள் வெளியே வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com