நேற்று ED..இன்று CBI.! திகார் சிறையில் கவிதா மீண்டும் கைது; காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டம்!

திகார் சிறையில் உள்ள கவிதாவை சிபிஐ காவல் துறையினர் இன்று (ஏப்ரல் 11) கைது செய்தனர்.
கவிதா, சிபிஐ
கவிதா, சிபிஐட்விட்டர்

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில், தெலங்கானா மாநில பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகா் ராவின் மகளும் அக்கட்சி எம்எல்சியுமான கே.கவிதாவும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், திகார் சிறையில் உள்ள கவிதாவை சிபிஐ காவல் துறையினர் இன்று (ஏப்ரல் 11) கைது செய்தனர். நீதிமன்றக் காவலில் உள்ள கவிதாவிடம் திகார் சிறையில் வைத்து கடந்த வாரம் சிபிஐ காவல்துறையினர் விசாரணை நடத்தி இருந்தனர். இந்த விசாரணையின் அடிப்படையில் திகார் சிறையில் உள்ள கவிதாவை கைது செய்வதாக சிபிஐ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க: வணிகத்தில் மோசடி: பாண்டியா சகோதரர்கள் கொடுத்த புகாரில் மற்றொரு சகோதரர் வைபவ் பாண்டியா அதிரடி கைது!

கவிதா, சிபிஐ
தெலங்கானா Ex CM மகள் கவிதா கைது.. டெல்லி அழைத்துச் செல்லும் ED!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com