பாலியல் வன்கொடுமைகள் சகஜம்தான்: மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

பாலியல் வன்கொடுமைகள் சகஜம்தான்: மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு
பாலியல் வன்கொடுமைகள் சகஜம்தான்: மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பது சகஜம்தான். அவற்றை பேசி பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம் என மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன. இந்தச் சூழலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிகவும் துரதிருஷ்டமானது என்றும் சில நேரங்களில் நம்மால் அவற்றை தடுக்க முடியாமல் போகிறது என்றும் தெரிவித்தார். இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஓரிரு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழவே செய்யும் என்றும் கூறிய அவர், இது தொடர்பாக தேவையற்ற பரபரப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்த வேண்டாம் எனக் கூறினார். இவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிகவும் முக்கியமான பிரச்னை, அவற்றை பொறுப்புடன் கையாள வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் கருத்து தெரிவித்ததாகவும் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com