பாலியல் தொழிலுக்காக குஜராத்துக்கு கடத்தி வரப்பட்ட வங்கதேச சிறுமி மீட்பு; 3 பேர் கைது!

பாலியல் தொழிலுக்காக குஜராத்துக்கு கடத்தி வரப்பட்ட வங்கதேச சிறுமி மீட்பு; 3 பேர் கைது!
பாலியல் தொழிலுக்காக குஜராத்துக்கு கடத்தி வரப்பட்ட வங்கதேச சிறுமி மீட்பு; 3 பேர் கைது!

பாலியல் தொழிலுக்காக குஜராத்துக்கு கடத்தி வரப்பட்ட வங்கதேச சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர் .  

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள கொல்வாட் கிராமத்தில், வங்கதேச நாட்டைச் சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக சூரத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று போலீசார் விசாரிக்கையில், 17 வயதான வங்கதேச சிறுமியை சட்டவிரோதமாக அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக மிஜானூர் அலைஸ் ஷரிஃபுல் ஷெய்க் (36), அவரது மனைவி அஜ்மிரா கதுன் (32) மற்றும் சிறுமியை கடத்திவர ஏஜென்ட்டாக செயல்பட்ட முர்துசா ஷேக் (31) ஆகியோர் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில், மிஜானூர் அலைஸ் ஷரிஃபுல் ஷெய்க் மற்றும் அவரது மனைவி அஜ்மிரா கதுன் ஆகிய இருவரும் வங்கதேசத்தில் இருந்து சூரத் மாவட்டத்தின் கொல்வாட் கிராமத்தில் சட்டவிரோதமாக குடியேறியது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தம்பதியினருக்கு வருமான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், குஜராத்தைச் சேர்ந்த ஏஜெண்டான முர்துசா ஷேக் என்பவரை அணுகி, வங்கதேசத்தில் இருந்து அந்த 17 வயது சிறுமியை விலைக்கு வாங்கி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். 

முர்துசா ஷேக், அந்த சிறுமியை வங்கதேசத்தில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து 15 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்கியதாகவும், இந்திய எல்லைக்குள் சிறுமியை கொண்டுவர மற்றொரு ஏஜெண்டுக்கு ரூ.4,000 செலுத்தியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com