உ.பி.யில் அம்பேத்கர் சிலை உடைப்பு

உ.பி.யில் அம்பேத்கர் சிலை உடைப்பு

உ.பி.யில் அம்பேத்கர் சிலை உடைப்பு
Published on

உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையை, அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அஸம்காரில் அம்பேத்கரின் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. சிலையின் தலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். கலவரம் ஏற்படாமல் இருக்க அப்பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன் மீரட்டிலுள்ள மவானா என்ற பகுதியில் அமைந்திருக்கும் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதனை அறிந்த தலித் சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும், உடைக்கப்பட்ட சிலைக்கு மாற்றாக புதிய சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com