ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

ஜோத்பூர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிவில் விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய தகவல் விமான புறப்பாட்டை மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமாக்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானதும், ஏர் இந்தியா பணியாளர்கள் அனைத்து பயணிகளையும் விமானத்தில் இருந்து வெளியேற்றி விமானத்தை முழுமையாக சோதித்தனர். முழுமையான சோதனை நிறைவுற்றதும் விமானம் டெல்லி புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரியான ஜி.கே. காரி தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com