‘பாபநாசம்’ படப் பாணியில்  காதலியைக் கொன்று வீட்டில் புதைத்தவர் கைது 

‘பாபநாசம்’ படப் பாணியில்  காதலியைக் கொன்று வீட்டில் புதைத்தவர் கைது 
‘பாபநாசம்’ படப் பாணியில்  காதலியைக் கொன்று வீட்டில் புதைத்தவர் கைது 
‘பாபநாசம்’ படப் பாணியில் பெண்ணை கொலை செய்து வீட்டிலேயே புதைத்த நபரை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 
கோட்டியம் அருகே உள்ள ஊர்  திரிக்கோவில்வாட்டம். இது கொல்லம் பகுதியைச் சேர்ந்ததாகும். இந்த ஊரில் வசித்து வந்தவர் சுசித்ரா (42). இவர் அழகுக்கலை நிபுணராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மார்ச் 18 அன்று கொச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகக் கூறி சுசித்ரா தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 
 
 
ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. மார்ச் 20 முதல் அவரது தொலைபேசியை அணுக முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. மார்ச் 22 அன்று காணாமல் போன சுசித்ராவை அவரது  குடும்பத்தினர் தேடியுள்ளனர். அவர் கிடைக்காத நிலையில் கோட்டியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் விசாரணையில், சுசித்ரா, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் ஐந்து நாள் விடுப்பு எடுத்துக் கொள்வதாக அவர் வேலை பார்க்கும் அழகுநிலைய முதலாளிக்குத் தகவல் தெரிவித்திருந்தது தெரியவந்தது.
 
 
மேலும் காவல்துறையினர் சுசித்ராவின் தொலைபேசி அழைப்புகளை ஆராயத் தொடங்கியுள்ளனர். அப்போது அவர் பாலக்காட்டில் உள்ள பிரசாந்த் என்ற இசை ஆசிரியரை தொடர்பு கொண்டதைக் கண்டறிந்தார். பின்னர் கொல்லத்தைச் சேர்ந்த குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று விசாரணைக்காக பாலக்காடு விரைந்தது. அங்கே பிரசாந்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தான்தான் இந்தக் கொலையைச் செய்ததாக பிரசாந்த் ஒப்புக்கொண்டதாகவும் ஆகவே அவரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். 
 
இந்நிலையில் சுசித்ராவின்  உடலை, கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்டு, பாதி எரிக்கப்பட்ட நிலையில்  போலீசார் கண்டெடுத்துள்ளனர்.  மேற்கண்ட விசாரணையில் கடந்த மார்ச் 18 ம் தேதி பிரசாந்த், தனது குடும்பத்தினரை வெளியே அனுப்பிவிட்டு, சுசித்ராவுடன் அவரது இல்லத்தில் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. 
 
 
மேலும் அப்போது இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
இந்தச் சண்டையில் பிரசாந்த், சுசித்ராவை ஒரு டேபிள் விளக்கின் வயரை கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலையை மூடி மறைப்பதற்காக பிரசாந்த், இறந்து போன சுசித்ராவின் இரு கால்களையும் துண்டித்து உடலை எரிக்க முயன்றுள்ளார். அதன் பின்னர் உடலைப்  பாலக்காடு ராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள இவரது வாடகை வீட்டின் பின்பக்கம் அடக்கம் செய்துள்ளார். இந்த விவரங்கள் யாவும் காவல்துறைக்கு வாக்குமூலமாக  பிரசாந்த் அளித்துள்ளார்.  அதனை வைத்தே சுசித்ராவின் உடலை போலீசார் தற்போது மீட்டுள்ளனர்.  இது தொடர்பான செய்தியை ‘தி நியூஸ் மினிட்’ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 Body of Kerala beautician who went missing a month ago found burnt and buried

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com