வெள்ள பாதிப்பு ஆய்வில் விபரீதம்! படகு கவிழ்ந்து ஆற்றில் தத்தளித்த ஆந்திர மாஜி அமைச்சர்கள்

வெள்ள பாதிப்பு ஆய்வில் விபரீதம்! படகு கவிழ்ந்து ஆற்றில் தத்தளித்த ஆந்திர மாஜி அமைச்சர்கள்
வெள்ள பாதிப்பு ஆய்வில் விபரீதம்! படகு கவிழ்ந்து ஆற்றில் தத்தளித்த ஆந்திர மாஜி அமைச்சர்கள்

ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற முன்னாள் அமைச்சர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் வடியாததால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ரஜூலு என்ற பகுதியில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசக் கட்சி தலைவர்கள் படகுகளில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர். அப்போது, முன்னாள் அமைச்சர்களின் படகு, பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. முன்னாள் அமைச்சர்கள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். இதை கண்ட அப்பகுதி மக்கள், தங்களிடமிருந்த பாதுகாப்பு கவசங்களை தண்ணீரில் வீச அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com