உத்தரப்பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் சரயு ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

உத்தரப்பிரதேசத்தில் பெதா என்ற பகுதியில் சரயு ஆற்றில்12 பேர் படகு பயணம் செய்த போது படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்தவர்கள் ஆற்றில் முழ்கினர். படகு மூழ்கியதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புப் படையினர் ஆறு பேரின் உடல்களையும் மீட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சமீபத்தில் இதே போல் யமுனை ஆற்றில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com