\
ப்ளூவேல்: மாணவர்களை கண்காணிக்க மேனகா காந்தி அறிவுரை

ப்ளூவேல்: மாணவர்களை கண்காணிக்க மேனகா காந்தி அறிவுரை

ப்ளூவேல்: மாணவர்களை கண்காணிக்க மேனகா காந்தி அறிவுரை
Published on

ப்ளூவேல் விளையாட்டால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாணவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்குமாறு கூறியுள்ளார். மேலும், மாணவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் அவர்களது பெற்றோரை அழைத்துப் பேச ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறும், உதவி எண் 1098-ஐ தொடர்புகொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இனி ஒரு மாணவர் கூட ப்ளூவேல் விளையாட்டுக்கு இரையாகக்கூடாது என்றும் மேனகா கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com