“பாஜக தொண்டர்களின் தொல்லை தாங்க முடியவில்லை” - மம்தா பேட்டி

“பாஜக தொண்டர்களின் தொல்லை தாங்க முடியவில்லை” - மம்தா பேட்டி

“பாஜக தொண்டர்களின் தொல்லை தாங்க முடியவில்லை” - மம்தா பேட்டி
Published on

வாக்குப்பதிவு தொடங்கிய காலையில் இருந்தே பாஜக தொண்டர்கள் தொல்லை கொடுத்து வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மக்களவைக்கு இறுதிக்கட்டமாக இன்று 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளும் அடங்கும். மேற்கு வங்கத்தில் மதியம் 5 மணி வரை 64.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு மாலை மணி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவிலுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது வாக்கினை பதிவு செய்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “ மாநிலத்தில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பாஜக தொண்டர்கள் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் தொல்லை கொடுத்து வருகின்றனர். இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவத்தை பார்த்ததே இல்லை” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com