“அடுத்த 40 ஆண்டுகள் பாஜகதான் ; தமிழகத்தில் விரைவில் ஆட்சி அமைப்போம்” - அமித் ஷா சூளுரை!

“அடுத்த 40 ஆண்டுகள் பாஜகதான் ; தமிழகத்தில் விரைவில் ஆட்சி அமைப்போம்” - அமித் ஷா சூளுரை!
“அடுத்த 40 ஆண்டுகள் பாஜகதான் ; தமிழகத்தில் விரைவில் ஆட்சி அமைப்போம்” - அமித் ஷா சூளுரை!

கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.

ஐதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் சகாப்தமாக இருக்கும் என்றும், இந்தியா "விஷ்வ குரு" (உலகத் தலைவராக) மாறும் என்றும் தெரிவித்தார்.

“கடந்த தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் பாஜகவின் வெற்றி, கட்சியின் "வளர்ச்சி மற்றும் செயல்திறனுக்கான அரசியலுக்கு" மக்கள் அளித்த ஒப்புதலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. குடும்ப ஆட்சி, சாதிவெறி மற்றும் சமாதான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தெலுங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வரும்.

2002 குஜராத் கலவர வழக்கில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி, அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக் குழு விடுவித்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பு "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது".

கலவரத்தில் அவரது பங்கு குறித்த விசாரணையை எதிர்கொள்ளும் போது பிரதமர் மோடி மவுனம் காத்தார். அரசியல் சாசனத்தில் நம்பிக்கை வைத்து விஷம் குடித்த சிவபெருமானைப் போல அவர் இருந்தார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியதை அடுத்து, "அராஜகத்தை பரப்ப" முயற்சிக்கின்றனர். பிரதமர் மோடி இதுபோன்ற நாடகத்தை ஒருபோதும் செய்யவில்லை. காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டது - காந்திகள், அதன் உறுப்பினர்கள் பலர் ஜனநாயகத்திற்காக போராடுவதாக சொல்கிறார்கள். ஆனால், கட்சியின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் காந்தி குடும்பம் உள் அமைப்புத் தேர்தலை நடத்த அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையற்றவை, அரசாங்கம் செய்யும் அனைத்து நல்ல செயல்களையும் எதிர்க்கின்றன” என்று பேசினார் அமித் ஷா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com