BJP suspended ex union minister RK Singh day after Bihar win
RK Singhx page

"சரியான வேட்பாளர் இல்லையா.. நோட்டாவிற்கு வாக்களிங்கள்" - பாஜக தலைவர் கட்சியில் இருந்து இடைநீக்கம்

பீகாரைச் சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.கே.சிங் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Published on
Summary

பீகாரைச் சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.கே.சிங் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் பீகாரின் அவுரா மக்களவைத் தொகுதியில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆர்.கே.சிங். இவர், 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடி அமைச்சரவையில் மத்திய மின்சார துறை அமைச்சராகப் பதவி வகித்தார். ஆனால், 2024இல் அவர் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், சமீபகாலமாக அவர் கட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. இது, சமீபத்தில் நடைபெற்று முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது எதிரொலித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் உட்பட அனைத்துக் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களையும் நிராகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அப்படி, சரியான வேட்பாளர் கிடைக்கவில்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் அறிவுறுத்தினார். மேலும், தேர்தல் காலத்தில் பெரிய அளவிலான ஆயுதமேந்திய வாகனத் தொடரணிகளின் நடமாட்டத்தைக் கண்டித்த சிங், ”இது ஜனநாயக விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதாகும் என்றும் அதிகாரிகள் மற்றும் செல்வாக்கு மிக்க வேட்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கோரினார். இது, பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. மேலும், 2,400 மெகாவாட் பாகல்பூர் (பிர்பைன்டி) மின் திட்டத்தை அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்க பீகார் அரசின் முடிவைப் பற்றி பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியிருந்தார். தவிர, அதுதொடர்பான ஆவணங்களையும் வெளியிட்டிருந்தார்.

BJP suspended ex union minister RK Singh day after Bihar win
பீகார் தேர்தலில் படுதோல்வி.. அரசியலிலிருந்து விலகிய லாலு பிரசாத் மகள்!

இந்த நிலையில்தான், ஆர்.கே.சிங் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக அவர் ஒரு வாரத்திற்குள் முறையான பதிலை சமர்ப்பிக்குமாறு கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக அது, "நீங்கள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறீர்கள், இது கட்சிக்கு தீங்கு விளைவித்துள்ளது. எனவே, உங்களை இடைநீக்கம் செய்து, ஏன் உங்களை நீக்கக்கூடாது என்று விளக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், கடிதம் வழங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, கட்சி தனது முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்கியதை உறுதிப்படுத்தியது. சிங்கின், இந்த நீக்கம் சமீபத்திய ஆண்டுகளில் பாஜகவின் வலுவான ஒழுங்கு நடவடிக்கைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மேலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கதிஹார் மேயர் உஷா அகர்வால் இதேபோன்ற நடவடிக்கையை எதிர்கொண்டார், இந்த நடவடிக்கையில் பாஜகவால் ஒழுங்குபடுத்தப்பட்ட மூன்றாவது தலைவர் ஆனார். முன்னதாக, பாஜக வேட்பாளர் தார் கிஷோர் பிரசாத்துக்கு எதிராக VIP வேட்பாளராகப் போட்டியிட்ட தனது மகன் சவுரவ் அகர்வாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததற்காக MLC அசோக் குமார் அகர்வாலை பாஜக இடைநீக்கம் செய்திருந்தது.

BJP suspended ex union minister RK Singh day after Bihar win
பீகார் | MLA ஆகாமலேயே 10வது முறையாக முதல்வராகும் நிதிஷ்.. MLCயை மட்டும் விரும்புவது ஏன்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com