மக்களின் வரிப்பணத்தை தவறாகப் பயன்படுத்துவதா? - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்க்கு பாஜக கண்டனம் 

மக்களின் வரிப்பணத்தை தவறாகப் பயன்படுத்துவதா? - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்க்கு பாஜக கண்டனம் 
மக்களின் வரிப்பணத்தை தவறாகப் பயன்படுத்துவதா? - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்க்கு பாஜக கண்டனம் 

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கொடி நிறத்தில் அரசு அலுவலகங்களுக்கு வர்ணம் பூசுவதற்கு பாரதிய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசின் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில், "கிராமங்களில் தலைமைச் செயலகம்" என்ற பெயரில் புதிய திட்டத்தை ஆந்திர அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக கிராமங்களில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அக்டோபர் 2ஆம் தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. 

இந்த நிலையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கொடி நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட மாதிரி அலுவலகத்தின் புகைப்படம் வெளியாகி இருப்பதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. மக்களின் வரிப்பணத்தை இதுபோன்று தவறாகப் பயன்படுத்துவது வன்மையாகக் கண்டித்தக்கது என்று பாரதிய ஜனதா சாடியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com