ஜெய்ஸ்ரீராம் என எழுதப்பட்ட 10 லட்சம் கடிதங்களை மம்தாவுக்கு அனுப்ப உள்ளோம் - பாஜக

ஜெய்ஸ்ரீராம் என எழுதப்பட்ட 10 லட்சம் கடிதங்களை மம்தாவுக்கு அனுப்ப உள்ளோம் - பாஜக
ஜெய்ஸ்ரீராம் என எழுதப்பட்ட 10 லட்சம் கடிதங்களை மம்தாவுக்கு அனுப்ப உள்ளோம் - பாஜக

ஜெய் ஸ்ரீராம் என எழுதப்பட்ட 10‌ லட்சம் கடிதங்களை மேற்கு வங்காள முதல்வர் மம்தா ‌பானர்ஜிக்கு அனுப்ப அ‌ம்மாநில பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பி‌னர் அர்ஜுன் சிங்‌ தெரிவித்தார். 

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நைஹடி பகுதியில் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரது பாதுகாப்பு வாகனங்களுக்கு முன்பாக சிலர் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். காரில் இருந்து கொண்டே இதனை கவனித்த மம்தா பொறுமையிழந்தார். 

காரில் இருந்து இறங்கிய அவர், முழக்கமிட்டவர்களை நோக்கிச் சென்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் திரிணமுல் கட்சித் தலைவர்கள் வீடுகளுக்கு அருகில் ஜெய் ஸ்ரீராம் எ‌ன்ற கோஷத்துடன் பாரதிய ஜனதா தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கா‌வல் துறையினர் தடியடி‌ நடத்தி‌‌ன‌ர்.

இந்நிலையில் ஜெய் ஸ்ரீராம் என எழுதப்பட்ட 10‌ லட்சம் கடிதங்களை மேற்கு வங்காள முதல்வர் மம்தா ‌பானர்ஜிக்கு அனுப்ப அ‌ம்மாநில பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பி‌னர் அர்ஜுன் சிங்‌ தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com