4 மாநில தேர்தல்களில் மக்களின் பேராதரவுடன் தாங்கள் வென்றுள்ளதாகவும், ஆனால் அதை மம்தா பானர்ஜி தவறாக மதிப்பிட்டுள்ளதாகவும் பாஜக கூறியுள்ளது.
4 மாநில தேர்தல் முடிவுகள் மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை என்றும், அரசு இயந்திரத்தின் உதவியுடன் பாரதிய ஜனதா வெற்றிபெற்றதாகவும் மம்தா கூறியிருந்த நிலையில் அதற்கு பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள மம்தா பானர்ஜி மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாகவும் அமித் மாளவியா குறிப்பிட்டார்.