“மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம்”- பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

“மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம்”- பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு
“மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம்”- பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என பாஜக எம்.பி அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி.யான அனந்தகுமார் ஹெக்டே அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கிக் கொள்வார். இந்த முறை அவர் மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதாவது மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என அவர் விமர்சித்துள்ளார். இதுபோன்ற நபர்களை எப்படி இந்தியாவில் ‘மகாத்மா’ என அழைக்கிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

பிரிட்டிஷ் ஆதரவுடன் இத்தகைய போராட்டங்கள் நடைபெற்றதாக கூறிய அவர், தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் அத்தகைய நபர்கள் ஒருமுறை கூட போலீசாரால் தாக்கப்பட்டதில்லை என தெரிவித்துள்ளார். இது ஒரு நேர்மையான போராட்டம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ்காரர்கள் விரக்தியால் சுதந்திரம் வழங்கியதாக தெரிவித்த அவர், வரலாற்றை படிக்கும்போது தனது இரத்தம் கொதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com