நாடாளுமன்ற வளாகத்தைச் சுத்தம் செய்த ஹேமமாலினி எம்.பி!

நாடாளுமன்ற வளாகத்தைச் சுத்தம் செய்த ஹேமமாலினி எம்.பி!

நாடாளுமன்ற வளாகத்தைச் சுத்தம் செய்த ஹேமமாலினி எம்.பி!
Published on

நாடாளுமன்ற வளாகத்தை மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர், பாரதிய ஜனதா எம்.பி. ஹேமமாலினி உள்ளிட்டோர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்யும் பணி இன்று நடை பெற்றது. இதில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், எம்.பி. ஹேமமாலினி ஆகியோர் பங்கேற்று சுத்தம் செய்தனர். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மேலும் சில எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த குப்பைகளைப் பெருக்கி சுத்தம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமமாலினி, ‘’இந்த முயற்சியை நாடாளுமன்ற சபாநாயகர் பாராட்டியுள்ளார். அடுத்த வாரம் எனது தொகுதியான மதுராவுக்கு செல்கிறேன். அங்கும் தூய்மை திட்டத்தை மேற்கொள்ள இருக்கிறேன்’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com