'ராகுல்காந்தியை நாட்டை விட்டு துரத்தவேண்டும்' - பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு

'ராகுல்காந்தியை நாட்டை விட்டு துரத்தவேண்டும்' - பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு
'ராகுல்காந்தியை நாட்டை விட்டு துரத்தவேண்டும்' - பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு

அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தும் பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர், தற்போது ராகுல் காந்தியை நாட்டை விட்டு துரத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, அண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது 'மைக்' அணைக்கப்படுகிறது என்று குற்றஞ்சாட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டு நிகழ்ச்சியில் தனது சொந்த நாட்டை இழிவுபடுத்தி பேசுவதாக ராகுல் காந்திக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா தாக்கூர் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பேட்டி ஒன்றில் கூறுகையில், "வெளிநாட்டு பெண்ணுக்கு பிறந்த ஒருவரால் தேச பக்தராக இருக்க முடியாது என்று சாணக்யர் கூறியுள்ளார். அது உண்மை என்பதை ராகுல் காந்தி தற்போது நிரூபித்துள்ளார். நாடாளுமன்றம் சீராக நடைபெற்றால், பல பணிகளை நம்மால் செய்ய முடியும். காங்கிரஸ் கட்சி தற்போது அழிவின் எல்லையில் இருக்கிறது. அவர்களது சிந்தனைகளும் தற்போது சிதைக்கப்பட்டு விட்டது.

இந்த நாட்டில் உள்ள மக்களால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, தற்போது அந்த மக்களை அவமதிக்கிறார். நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு தரப்படவில்லை என்று கூறுவது வெட்கக்கேடானது. ராகுல் காந்திக்கு அரசியல் வாய்ப்பளிக்காமல், அவரை நாட்டை விட்டு துரத்தியடிக்க வேண்டும்" என்று பிரக்யா தாக்கூர் பேசியுள்ளார்.

அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தும் போபால் எம்.பி. பிரக்யா சிங் தாகூர், தற்போது ராகுல் காந்தியை நாட்டை விட்டு துரத்த வேண்டும் வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com