18 ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, ஏப்ரல் 26, மே 7, 13, 20 மற்றும் 25 என 6 கட்டத் தேர்தல் நிறைவடைந்தது. மொத்தமாக 486 தொகுதிகளில் தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில்தான் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, Republic Bharat-P Marq கருத்துக்கணிப்பு முடிவுகள் மீண்டும் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் முடிவுகளே எதிரொலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 359 இடங்களை வெல்லும் எனவும், எதிர்க்கட்சியான INDIA கூட்டணி 154 இடங்களை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Republic Bharat- Matrize கருத்துக்கணிப்பு முடிவுகள், பிரதமர் மோடியே மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என தெரிவித்துள்ளது. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி 353 முதல் 368 தொகுதிகளை வெல்லும் என்றும், INDIA கூட்டணி 118 முதல் 133 தொகுதிகளை வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது.
India News கருத்துக் கணிப்பு முடிவுகள் படி, தேசிய ஜனநாயக கூட்டணி 371 தொகுதிகளை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. INDIA கூட்டணி 125 தொகுதிகளை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பிற கட்சியினர் 47 தொகுதிகளை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Express வாசகர்களின் முடிவுகளின்படி, INDIA 158 தொகுதிகளை வெல்லும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி 256 தொகுதிகளை வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சியினர் 129 தொகுதிகளை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jan Ki Baat கருத்துக் கணிப்புகள் முடிவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 362 முதல் 392 தொகுதிகளை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. INDIA கூட்டணி 141 முதல் 161 தொகுதிகள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவி 5 தெலுங்கு கருத்துக் கணிப்புகள் முடிவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 359 தொகுதிகளையும், INDIA கூட்டணி 154 தொகுதிகளையும், பிற கட்சிகள் 30 தொகுதிகளையும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.