கர்நாடகா: முதல்வர் முன்னிலையில் மேடையிலையே பாஜக, காங். நிர்வாகிகள் இடையே ‘தள்ளு முள்ளு'

கர்நாடகா: முதல்வர் முன்னிலையில் மேடையிலையே பாஜக, காங். நிர்வாகிகள் இடையே ‘தள்ளு முள்ளு'
கர்நாடகா: முதல்வர் முன்னிலையில் மேடையிலையே பாஜக, காங். நிர்வாகிகள் இடையே ‘தள்ளு முள்ளு'

கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவின் ராமநகராவில் நடைபெற்ற அரசு விழாவில், அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்றிருந்தார். இந்த விழாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் தரப்புக்கு இடையே ‘தள்ளு முள்ளு' நடந்துள்ளது. இது இரண்டு தேசிய கட்சிகளுக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 காங்கிரஸ் கட்சியின் பெங்களூர் ஊரக தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. சுரேஷ் மற்றும் கர்நாடக மாநில அமைச்சர் அஸ்வத் நாராயணுக்கு இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் சுரேஷ், மேடையில் பேசிக் கொண்டிருந்த அமைச்சரை நோக்கி செல்கிறார். அதற்குள் அவர்கள் இருவரையும் அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் மற்றும் போலீசார் குறுக்கிட்டு தடுத்தனர். தொடர்ந்து மேடைக்கு கீழே இருந்த பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனல் பறக்கும் வகையில் வார்த்தைகளை கொண்டு மோதிக் கொண்டுள்ளனர். 

அதற்குள் மற்றொரு காங்கிரஸ் கட்சி நிர்வாகி, அமைச்சர் அஸ்வத் நாராயணுடன் மல்லுக்கு நின்றுள்ளார். பின்னர் அதிக அளவிலான போலீசார் அங்கு வந்திருந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதன் வீடியோ தற்போது இணைய வெளியில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com